நெல்லை: கருப்பன்துறை பகுதியில் அழியாபதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது. தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள 39 சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை மீட்டது. கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் ஜேசிபி மூலம் இடித்து அகற்றப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டது.