சென்னை: தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜி.பி.எஸ். மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும். அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும். பள்ளி வாகன ஓட்டுநர்கள், கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.