சென்னை: இந்திய நாட்டுக்கே வழிகாட்டிடும் வகையில் மகளிர் உரிமை திட்டம் சமூக நீதி திட்டங்களில் ஒரு மாபெரும் முன்னோடித் திட்டம் இதுவாகும் என்று திமுக கூறியுள்ளது. தங்கள் அண்ணன் முதலமைச்சர் கொடுத்த தாய்வீட்டு சீதனம் என்று பூரிப்புடன் கூறி பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எந்த நாட்டிலும் இல்லாத புதுமைத் திட்டத்தை மகளிர் சமுதாயம் வாழ்த்துகிறது.