சென்னை: ஆவடி சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் வெளியான பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. கைதான மகேஷ், சித்த மருத்துவர் சிவன் நாயரிடம் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மகேஷின் செல்போனை கைப்பற்றி ஆவடி போலீசார் விசாரித்ததில் ஆபாச உரையாடல்கள் இருந்தது கண்டுபிடித்துள்ளனர். மகேஷ் ஏராளமான பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெரும்பாலான நேரத்தை ஆபாச இணையதளங்களில் மகேஷ் செலவிட்டு வந்ததையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.