சென்னை: எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் உருவாக்குவதாக அமைந்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க, மக்களாட்சியை தத்துவத்தை நிலைநிறுத்த, ஏழை மக்களின் நலனைக் காக்கவே பாட்னாவில் கூடினோம். நாட்டின் பன்முகத்தன்மை, ஏழை மக்களின் நலனை காக்க வேண்டுமென்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது. எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யவில்லை எனவும் கூறினார்.