சென்னை: ஓ.பன்னீர்செல்வம் தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காக மாநாடு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் மாநாட்டால் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை எனவும் ஓபிஎஸ் என்ற தேவையற்ற சுமையை கழற்றி விட்டபின்னர் அதிமுக எஞ்சின் தடையின்றி சென்று கொண்டிருக்கிறது எனவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.