Saturday, May 4, 2024
Home » விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு

விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு

by Dhanush Kumar
Published: Last Updated on

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எக்கியார் குப்பத்தை சேர்ந்த கன்னியப்பன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தை சேர்ந்தவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்தத்தில் அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு முதல் அமைச்சர் நிதி உதவி அளித்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விஷ சாராயம் குடித்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எக்கியார் குப்பத்தை சேர்ந்த கன்னியப்பன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து இதுவரை 15 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

You may also like

Leave a Comment

seventeen − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi