சென்னை: ஓமனில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். ஓமனில் மசூர் என்பவரிடம் மீன்பிடித்தொழில் செய்த 18 தமிழக மீனவர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை தேவை. வேலைக்கு உரிய சம்பளம் கொடுக்காமல் 18 பேரையும் மசூர் துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது என்று வைகோ தெரிவித்திருக்கிறார்.