ஆவடி: முதியவர் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது பலியானார். ஆவடி அடுத்த பட்டாபிராம், அண்ணா நகர், ரெட்டியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (69). ஓய்வு பெற்ற ஓ.சி.எப். ஊழியர். இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர். கோவிந்தன், நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொள்ள வீட்டில் இருந்து புறப்பட்டார். அப்போது, ஆவடி – இந்து கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்தபோது, சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியது.
இதில் கோவிந்தன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீசார், விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.