திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பெருவயல் பகுதியை சேர்ந்தவர் ஜானகி (91). இவரிடம் வாக்கு பதிவு செய்வதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டுக்கு அதிகாரிகள் சென்றனர். அப்போது மூதாட்டி ஜானகிக்கு பதிலாக பக்கத்து வீட்டை சேர்ந்த 80 வயதான இன்னொரு ஜானகி என்ற மூதாட்டி வாக்கு செலுத்தி உள்ளார்.இதையடுத்து, ஜானகியின் வீட்டுக்கு வாக்குப்பதிவுக்காக சென்ற தேர்தல் அதிகாரிகளான மஞ்சுஷா, ஹப்மிதா, அனீஸ், ஹரீஷ்குமார் ஆகிய 4 அதிகாரிகளை கைது செய்தனர்.