புவனேஸ்வர்: ஒடிசா மாநில பாஜக பெண் துணைத் தலைவரான லேகா சமந்த்சிங்கர், இன்று காலை பாஜக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கட்சித் தலைமைக்கு அனுப்பி உள்ள ராஜினாமா கடிதத்தில், ‘கடந்த 10 ஆண்டுகளாக கட்சிக்காய கடுமையாக உழைத்தேன். ஆனால் எனக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
கடின உழைப்பும், நேர்மையும் என்னிடம் இருந்தபோதிலும், தேசிய தலைமையின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை. அதனால் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன், மாநில சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில பாஜக பெண் துணைத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.