டிரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா அதிரடியாக விளையாடி ரன் குவித்தது. பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. இந்திய அணியில் ரோகித், கோஹ்லிக்கு மீண்டும் ஓய்வளிக்கப்பட்டது. மாலிக், அக்சருக்கு பதிலாக ருதுராஜ், உனத்கட் சேர்கப்பட்டனர்.
இஷான், கில் இணைந்து இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 143 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. இஷான் 77 ரன் (64 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி யானிக் காரியா பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். கெயிக்வாட் 8 ரன் எடுத்து ஜோசப் வேகத்தில் கிங் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இந்தியா 29 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்திருந்தது. கில் 76 ரன், சஞ்சு சாம்சன் 35 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.