லண்டன்: இங்கிலாந்து-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2வது போட்டியில் நியூசிலாந்தும் வென்ற நிலையில 3வது போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் டேவிட மாலன் 96, பென் ஸ்டோக்ஸ் 124 பந்தில் 15 பவுண்டரி, 9 சிக்சருடன் 182 ரன் விளாசினர். 48.1 ஓவரில் 368 ரன் எடுத்து இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து பவுலிங்கில் டிரெண்ட் போல்ட் 5 விக்கெட் எடுத்தார்.
பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் க்ளென் பிலிப்ஸ் 72, ரச்சின் ரவீந்திரன் 28 ரன் எடுக்க மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். 39 ஓவரில் 187 ரன்னுக்கு நியூசிலாந்து சுருண்டது. இதனால் 181 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் கிறிஸ் வோக்ஸ், லிவிங்ஸ்டன் தலா 3 விக்கெட் எடுத்தனர். பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்க கடைசி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடக்கிறது.