Saturday, May 11, 2024
Home » வேட்புமனு தாக்கலில் தவறான தகவல் எடப்பாடிக்கு சம்மன் அனுப்ப சேலம் போலீசார் ஆலோசனை

வேட்புமனு தாக்கலில் தவறான தகவல் எடப்பாடிக்கு சம்மன் அனுப்ப சேலம் போலீசார் ஆலோசனை

by Karthik Yash

சேலம்: எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில் விசாரிக்க தடையில்லாததால் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சேலம் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில், சொத்துக்கள், வருமானங்களில் தவறான தகவல்களை தெரிவித்து உள்ளதாகவும், அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேனியை சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்தார். இதில் விசாரணை நடத்தி, கடந்த 6ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. 6ம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணைக்காக பட்டியலில் வரவில்லை. எந்நேரமும் வழக்கு விசாரணைக்கு வரலாம் என போலீசார் தயாராக உள்ளனர். இதற்கிடையில் இதுதொடர்பாக பல்வேறு அரசு துறைகளில் பெரும்பாலான ஆவணங்களை போலீசார் வாங்கிவிட்டனர். இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை ஏதும் விதிக்காத நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவது தொடர்பாக போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

ten − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi