புதுச்சேரி: புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவிலில் நேற்று நடந்த மராத்தான் ஒட்டப்பந்தயத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து கலந்து கொண்டார். தொடர்ந்து, புதுச்சேரி – கடலூர் சாலையில் உள்ள சிங்கார வேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
புதுவையை தொடர்ந்து, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் பஞ்சு மிட்டாய்கள் ஆய்வு செய்ததில் புற்றுநோய் பாதிப்பை உண்டாக்குகிற வேதி கலவை இருப்பது கண்டறியப்பட்டது. வண்ண கலவை இருக்கிற பஞ்சு மிட்டாய்க்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெண்மை நிறுத்தில் உள்ள பஞ்சு மிட்டாய்க்கு தடையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.