கரூர்: குளித்தலை ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் திருச்சி பாலக்காடு விரைவு ரயில் 2 மணி நேரமாக நிறுத்தப்பட்டது. நீண்டநேரம் காத்திருக்க வைத்ததால் ஆவேசம் அடைந்த பயணிகள் ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லாலாபேட்டை ரயில் நிலையம் அருகே புதிய தண்டவாளப் பணிகள் நடைபெறுவதால் ரயில் நிறுத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.