Thursday, May 16, 2024
Home » 6வது நாளாக என்எல்சி ஒப்பந்த ஊழியர்கள் ஸ்டிரைக்

6வது நாளாக என்எல்சி ஒப்பந்த ஊழியர்கள் ஸ்டிரைக்

by Neethimaan

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களை பிரதமர் அறிவித்த ரோஸ்கார் மேளா திட்டத்தின் கீழ் பணி நிரந்தரம் செய்ய கோரியும், பணி நிரந்தரம் செய்யும் வரை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.50,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26ம் தேதி இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வரும் அவர்கள் நேற்று 5வது நாளாக என்எல்சி தலைமை அலுவலகம் எதிரே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் என்எல்சி தலைமை அலுவலகம் முன் சமையல் செய்து அங்கேயே உணவருந்தி வருகின்றனர். இதற்கிடையே நேற்றும் விடிய விடிய போராட்டத்தை தொடர்ந்த அவர்கள் இன்று 6வது நாளாக தங்களின் வேலைநிறுத்தப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

thirteen − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi