Thursday, May 2, 2024
Home » புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மீது அவதூறு வழக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல்: எழும்பூர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மீது அவதூறு வழக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல்: எழும்பூர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

by Karthik Yash

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு எதிராக தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில் 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை என்றும் இதனால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி எழும்பூர் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எனக்கு எதிராக ஆதாரமின்றி கிருஷ்ணசாமி புகார் செய்துள்ளார். அந்த புகாரை கட்சியின் இணையதளத்தில் பதிவேற்றமும் செய்துள்ளார். டிவிட்டர் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார். பத்திரிகைகளுக்கு பேட்டியும் அளித்துள்ளார். உண்மைக்கு புறம்பாக எந்த ஆதாரமும் இல்லாமல் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ள கிருஷ்ணசாமியை அவதூறு சட்ட பிரிவின்கீழ் தண்டிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

You may also like

Leave a Comment

1 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi