Wednesday, May 15, 2024
Home » திருமணமாகி 20 நாட்களே ஆன நிலையில் புதுப்பெண் திடீர் மரணம்: ஆர்டிஓ விசாரணை

திருமணமாகி 20 நாட்களே ஆன நிலையில் புதுப்பெண் திடீர் மரணம்: ஆர்டிஓ விசாரணை

by Ranjith

பெரம்பூர்: விநாயகபுரம் வேல்முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்துஜா (27), ஐடி துறையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 5 வருடங்களாக, பெரம்பூர் ஜமாலியா எஸ்பிஐ காலனியை சேர்ந்த ஹரிகரன் (30) என்பவரை காதலித்து, கடந்த ஜனவரி 21ம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.
நேற்று முன்தினம் மதியம் கணவர் வீட்டில் வேலை செய்த இந்துஜா மயங்கி விழுந்துள்ளார். ஹரிகரன் இந்துஜாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இந்துஜா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரிஹரன் மற்றும் அவரது குடும்பத்தினர், இந்துஜாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இந்துஜாவின் உடலை சோதனை செய்ததில், உடலில் எந்தவிதமான காயங்களும் இல்லை என்பதால் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் திருமணம் ஆகி 20 நாட்கள் மட்டுமே ஆவதால் வழக்கை கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைத்தனர்.

You may also like

Leave a Comment

2 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi