அதிமுக பிரச்னையில் குளிர்காய நாங்க விரும்பலை என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: மற்றொரு கட்சியின் உட்கட்சி பிரச்னையை பேச மாட்டோம் என்பதில் நாங்கள் எப்போதும் தெளிவாக உள்ளோம். 2017 – 2021 காலகட்டத்தில் அதிமுக எப்படி இருந்தது என்பதை நாங்கள் கூற முடியாது. அதிமுக பிரச்னையில் நாங்கள் குளிர்காய விரும்பவில்லை என்பதையே ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வருகிறோம். ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்ததாலேயே கருத்து தெரிவித்து வருகிறார்.
பிரதமர் மோடி தமிழகம் வரும்போது ஓ.பன்னீர் செல்வம் 2 முறை வரவேற்க வந்துள்ளார். பிரதமர் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவர், பிரதமராக மோடி வரவேண்டும் என்பதை அவர் மீண்டும் தெரிவித்துள்ளார். இதற்காக ஓ.பன்னீர் செல்வத்திற்கு நன்றி. யாத்திரைக்கு அனுமதி கொடுக்காததற்கு காவல்துறை மீது எந்த கோபமும் கிடையாது. எந்த பிரச்னையும் இல்லாமல் யாத்திரையை நடத்தியுள்ளோம். எனவே, சென்னையில் கெட்டபெயரை வாங்க விரும்பவில்லை. பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கியதற்கு நன்றி.