கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று அளித்த பேட்டி: அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 2000 பஸ்கள் விரைவில் வாங்க முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலா பகுதிகளை இணைக்கவும், கும்பகோணத்தில் நவக்கிரக தலங்களை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 2 ஆயிரம் பேருந்துகள் வந்த பிறகு இது நடைமுறைப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் 21 ஆயிரம் பஸ்களை வைத்துக்கொண்டு மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தை எப்படி சிறப்பாக செயல்படுத்த முடிகிறது என பல்வேறு மாநில போக்குவரத்து துறை அமைச்சர்களால் ஆச்சரியத்தோடு பேசப்பட்டு வருகிறது என்றார்.