சென்னை: வானகரம் ஓடமா நகரில், 15வது நிதிக்குழு மானிய நிதியில் ரூ.15.25 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன்கடை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்றது. இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா சீனிவாசன் தலைமையில் நடந்தது. மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த குடும்ப அட்டை பயனாளிகளுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை அவர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, ஓடமா நகர் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணிகளையும் அவர்தொடங்கி வைத்தார்.