Sunday, June 16, 2024
Home » புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்; புதுவையில் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட 4 மாணவர்கள் உடல் மீட்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்; புதுவையில் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட 4 மாணவர்கள் உடல் மீட்பு

by MuthuKumar

புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகள்கள் மோகனா (17), லேகா (14). இவர்கள் சுப்பிரமணிய பாரதி அரசு பள்ளியில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் கடந்த 31ம்தேதி கடற்கரைக்கு புத்தாண்டு கொண்டாட சென்றனர். இவர்களுடன் அவர்களது குடும்ப நண்பர்களான எல்லைபிள்ளைச்சாவடி முருகையன் மகன் நவீன் (17), அவரது நண்பர் சாரம் பாலாஜி நகர் கிஷோர் (17) ஆகியோரும் சென்றனர். இவர்கள் சீகலஸ் ஓட்டல் பின்புறம் கடற்கரையில் குளித்து விளையாடியபோது எழுந்த ராட்சத அலையில் சிக்கி 4 பேரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். மற்றவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குபதிந்து மாயமானவர்களை தேடி வந்தனர். இதனிடையே நேற்று கடலில் ரோந்து சென்ற கடலோர பாதுகாப்பு படையினர், வீராம்பட்டினம் கடற்கரையில் இருந்து 7 நாட்டிகல் மைல் தூரத்தில் லேகாவின் உடலை மீட்டனர்.

தொடர்ந்து கிஷோரின் உடல் சின்ன வீராம்பட்டினம் கடற்கரையிலும், மோகனா உடல் வீராம்பட்டினம் கடற்கரையிலும் நேற்று மாலை கரை ஒதுங்கின. மீட்கப்பட்ட 3 உடல்களும் பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு பிரேத பரிசோதனை நடத்தி பெற்றோரிடம் மாணவிகள் மற்றும் டிப்ளமோ கேட்டரிங் மாணவர் கிஷோரின் உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இறுதி சடங்கு நடைபெற்றது. இதில், ஒரே வீட்டில் 2 மாணவிகள் பலியான நிலையில் நெல்லித்தோப்பு பகுதி சோகத்தில் மூழ்கியது.

இதனிடையே மாயமான நவீனை தேடும் பணி தொடர்ந்து 3வது நாளாக இன்று நடந்தது. இந்நிலையில் அவரது உடல் இன்று சின்னவீராம்பட்டினம் ஈடன் பீச் அருகே கரை ஒதுங்கியதாக ஒதியஞ்சாலை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அரியாங்குப்பம் போலீசாரின் உதவியுடன் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

You may also like

Leave a Comment

5 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi