![](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/04/41-l-5.jpg?type=webp&quality=80)
சென்னை: 5 மாவட்டங்களுக்கு பாஜவில் புதிய பார்வையாளர்களை நியமித்து, மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பாஜவில் 5 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கே.முரளீதரன், செங்கல்பட்டு தெற்கு எம்.ரவி, கிருஷ்ணகிரி கிழக்கு கே.வெங்கடேசன், சேலம் மேற்கு ஆர்.ஏ.வரதராஜன், தர்மபுரிக்கு கே.முனிராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.