மதுரை: நியோமேக்ஸ் வழக்கில் மதுரை டான்பிட் சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. நியோமேக்ஸ் வழக்கில் 10 வழக்கறிஞர்களை ஆணையர்களாக நியமித்து டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியோமேக்ஸ் நிறுவனத்தினர் முதலீட்டாளர்களிடம் சுமார் ரூ.3,000 கோடிக்கு மேல் மோசடி என புகார் எழுந்தது. புகார்தாரர்களிடம் இருந்து மனுக்களை பெற 10 வழக்கறிஞர்களை ஆணையர்களாக நியமித்து டான்பிட் ஆணை பிறப்பித்தது.