மதுரை: நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடி குறித்து விரைவாக விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. நிதிநிறுவனத்தில் முதலீடு செய்த மூத்த குடிமக்கள் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாக மனுதாரர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த மூத்த குடிமக்கள் சார்பாக உயர்நீதிமன்ற கிளையில் மானுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.