நெல்லை: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக அவரின் மகன்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயக்குமார் மரண வழக்கை விசாரிக்க மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மூத்த மகன் கருப்பையா ஜெப்ரின், இளையமகன் மார்ட்டினிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் 9 தனிப்படை அமைத்து விசாரணை தீவிரமடைந்துள்ளது.