நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செம்கார்ப், டாடா பவர் நிறுவனங்கள் முதலீடு செய்கிறது. சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. செம்கார்ப், டாடா பவர் நிறுவனங்கள் முதலீடு செய்வதன் மூலம் தென் மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, பெரம்பலூரில் காலணி உற்பத்தி நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன.