நெல்லை: நெல்லை ஈரடுக்கு மேம்பால பக்கசுவர் உடைந்து விழுந்து ஒருவர் இறந்தது தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. வேல்முருகன் என்பவர் உயிரிழந்தது தொடர்பாக ஒப்பந்ததாரர் ரியான் மற்றும் 5 பேர் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. புனரமைப்பு பணியின்போது பாலத்தின் பக்க சுவர் உடைந்து மேலே விழுந்து வேல்முருகன் என்பவர் உயிரிழந்தார்.