அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9, 10 மற்றும் பிளஸ்1, பிளஸ்2 பயின்று வரும் மாணவர்களில் படிப்பில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 422 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு, அரியலூர் அடுத்த கீழப்பழுவூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வகுப்பு பாடங்கள் மட்டுமன்றி நீட் மற்றும் ஜேஇஇ போன்ற போட்டித்தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகளை அரசு நடத்தி வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படிக்கின்றனர். இங்கு அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் கபிலன்(17) பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் போர்வையை கிழித்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.