சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத 65,823 மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களுக்கும் மாணவர்களின் சூழ்நிலை குறித்து மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. 20 மனநல ஆலோசகர்கள் மூலம் தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.