சென்னை: நுழைவுத் தேர்வு பயிற்சியில் புகழ்பெற்ற ராஜஸ்தானில் கோட்டா நகரில் தற்கொலை நிகழ்வது வேதனை அளிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தற்கொலைகளை தடுப்பதை விட அதற்கான காரணங்களை அகற்றுவதே சிறந்தது. மாணவ, மாணவியருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்வதுதான் மாணவர்களை தற்கொலைகளில் இருந்து தடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.