சென்னை: தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத்பவார்தான் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் முதல்வர் பதிவிட்டிருப்பதாவது: 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நோக்கி அகில இந்திய அரசியல் மையம் கொண்டிருக்கும் நேரத்தில், இந்திய அளவில் மதச்சார்பற்ற அணியை வலுப்படுத்துவதற்கு முக்கியமான, பெரும் தலைவர்களில் ஒருவரான மரியாதைக்குரிய சரத்பவார், தனது கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து அவர்தான் வழிநடத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், வேண்டுகோள்களை ஏற்று, தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக எடுத்த முடிவை சரத்பவார் வாபஸ் பெற்றார்.