சென்னை: மும்பை போதை பொருள் கடத்தல் மன்னன் லலித் பாட்டிலை மும்பை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். கடந்த 2-ம் தேதி மும்பை சிறையில் இருந்து சிசிச்சை பெற மருத்துவமனை வந்தபோது லலித் பாட்டில் தப்பினார். குஜராத், கர்நாடகா மாநிலங்களில் தலைமறைவாக இருந்த லலித் பாட்டில், சென்னைக்கு வந்து பதுங்கியிருந்தபோது கைது செய்யபட்டார். ரூ.130 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் என்ற போதை பொருளை, லலித் பாட்டில் பயோடெக் கம்பெனியில் தயாரித்தது தெரியவந்துள்ளது.