Friday, May 17, 2024
Home » அயப்பாக்கம் அருகே எம்டிசி நடத்துனரை தாக்கிய போதை ஆசாமி கைது: கூட்டாளிக்கு வலை

அயப்பாக்கம் அருகே எம்டிசி நடத்துனரை தாக்கிய போதை ஆசாமி கைது: கூட்டாளிக்கு வலை

by Ranjith

ஆவடி: எம்டிசி நடத்துனரை தாக்கிய போதை ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம், திருவதிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம்(59). அம்பத்தூர் எஸ்டேட் பணிமனையில் தங்கி நடத்துனராக பணியாற்றி வருகிறார். கடந்த 8ம் தேதி மதியம் அம்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து, அயப்பாக்கம் நோக்கி மாநகர பேருந்து தடம் எண் (73சி) சென்றது. கோபால்(46) என்பவர் பேருந்தை ஓட்டிச்சென்றார். நடத்துனராக ராஜாங்கம் இருந்தார். அயப்பாக்கம் அருகே வந்தபோது, பேருந்தில் இருந்த இரண்டு போதை ஆசாமிகள், படியில் தொங்கியவாறு தகாதவார்த்தைகள் பேசி தகராறில் ஈடுப்பட்டனர். இவர்களை ராஜாங்கம், கோபால் கண்டித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள், பேருந்து அயப்பாக்கம் அருகே வந்தபோது, ராஜாங்கத்தை தகாத வார்த்தை பேசி, சரமாரியாக அடித்து, உதைத்து கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றனர். இதில், ராஜாங்கத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் படி, திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (31) என்பவரை கைது செய்தனர். பின்னர், அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், அவரது கூட்டாளியை வலைவீசி தேடிவருகின்றனர்.

You may also like

Leave a Comment

fifteen + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi