சென்னை: நாங்குநேரி சம்பவம் நாட்டின் இதயத்தில் விழுந்த வெட்டு என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “நாங்குநேரி சம்பவம் நாட்டின் இதயத்தில் விழுந்த வெட்டு, சாதியைக்கூட மன்னிக்கலாம் அதற்கு இழிவு பெருமை கற்பித்தவனை மன்னிக்க முடியாது, சமூக நலம் பேணும் சமூகத் தலைவர்களே! முன்னவர் பட்ட பாடுகளைப் பின்னவர்க்குச் சொல்லிக் கொடுங்கள் அல்லது மதம் மாறுவதுபோல் சாதி மாறும் உரிமையைச் சட்டமாக்குங்கள்” என தெரிவித்துள்ளார்.