Wednesday, May 22, 2024
Home » நாமக்கல் தொழிலதிபர் வீட்டில் ரூ.4.8 கோடி சிக்கியது: அதிமுக நகர செயலாளர் வீட்டில் ரூ.1 கோடி நகை, பணம் பறிமுதல்

நாமக்கல் தொழிலதிபர் வீட்டில் ரூ.4.8 கோடி சிக்கியது: அதிமுக நகர செயலாளர் வீட்டில் ரூ.1 கோடி நகை, பணம் பறிமுதல்

by Mahaprabhu

சேலம் மாவட்டம் தாரமங்கலம் சன்னதி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (71). இவர் அதிமுக நகர செயலாளராகவும், நகர்மன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது மகன் பாஸ்கர். பாலசுப்பிரமணியம் 2 நகைக்கடைகள் நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்க, கோடிக்கணக்கில் பணத்தை பாலசுப்பிரமணியம் பதுக்கி வைத்திருப்பதாக சேலம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணியத்தின் இரண்டு வீடுகள், நகைக்கடைகளில் ேசாதனை செய்தனர். மேலும் அவரது மகன் பாஸ்கரின் வீடு, அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய சோதனை நேற்று அதிகாலை 3 மணி வரை நடந்தது. சோதனையின்போது, கணக்கில் வராத சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கார்களில் எடுத்துச் சென்றனர்.

மேலும், விசாரணை நடத்துவதற்காக பாஸ்கரை, வருமான வரித்துறையினர் உடன் அழைத்துச் சென்றனர். நாமக்கல் மோகனூர் ரோடு காந்தி நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (70). இவர், பஸ், நிதி நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். மேலும், தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் செயலர், பல்வேறு நிதி நிறுவனங்களில் பங்குதாரராகவும் உள்ளார். வாக்களர்களுக்கு கொடுக்க வீட்டில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பதாக, கிடத்த தகவலின்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் நேற்று மதியம் இவரது வீட்டுக்கு சென்றனர். அப்ேபாது அங்கிருந்த சந்திரசேகரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இரவு 10 மணி வரை சோதனை நடந்தது.இதையடுத்து வீட்டில் பல இடங்களில் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த ரூ. 4.8 கோடி பணத்தை பறிமுதல் செய்து இரண்டு பெட்டிகளில் எடுத்து சென்றனர்.

You may also like

Leave a Comment

eight + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi