சென்னை: இன்றும், நாளையும் நாகர்கோவில் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று மாலை 4.30க்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில் அதிகாலை 4.10மணிக்கு தாம்பரம் வந்துசேரும். நாளை காலை 8.05மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் இரவு 10மணிக்கு கொச்சுவேலி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.