நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடலில் மூழ்கி ஆந்திராவை சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் குப்பம் பகுதியை சேர்ந்த சோமநாய்க் சஞ்சய், கேசவரதன், அஜீஸ், பைசூலா ஆகிய 4 பேரும் வேளாங்கண்ணி வந்தனர். அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர்கள் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர்.
அப்போது எழும்பிய ராட்சத அலையில் 4 பேரும் சிக்கி ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்டனர். அஜீஸ், பைசூலா ஆகியோர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கடலில் தத்தளித்த சஞ்சய், கேசவர்த்தனை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.