சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றி பயணம் தொடரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறி இருப்பதாவது: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பயனாக கல்லூரி மாணவ, மாணவியர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருவது மனநிறைவு தருகிறது.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றி பயணம் தொடரும். தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல் தலைமுறை பட்டதாரிகள் அனைவரும் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே நமது திராவிட மாடல் அரசின் நோக்கம். நமது திட்டங்களால் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம். இவ்வாறு கூறியுள்ளார்.