சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் மீனவ கிராமம். இங்குள்ள கடற்கரையில் இன்று காலை இரும்பாலான மர்ம பெட்டி ஒன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். ஒன்றரை அடி நீளம், ஒரு அடி அகலம் கொண்ட சந்தன கலர் பெயின்ட் பூசப்பட்ட இரும்பு பெட்டி கரை ஒதுங்கியது தெரியவந்தது. இந்த இரும்பு பெட்டி சீல் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இரும்பு பெட்டியை கைப்பற்றி காவல் நிலையம் எடுத்து வந்து கரைக்கு எப்படி வந்தது என போலீசார் விசாரிக்கின்றனர்.
கரை ஒதுங்கிய மர்ம பெட்டி
previous post