பெலகாவி: கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா ஹிரேகுடி என்ற கிராமத்தில் சமண துறவி ஆச்சார்யா காமகுமார நந்தி மகாராஜா என்பவர் 15 ஆண்டுகளாக ஆசிரமம் நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் திடீரென அவர் மாயமானார். இந்த வழக்கு தொடர்பாக ஆசிரமத்தில் பணியாற்றி வரும் ஒருவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆசிரம அறக்கட்டளை மூலம் பணம் பெற்றதை சமண துறவி திருப்பி கேட்டதால் ஆத்திரம் அடைந்து வெட்டி கொலை செய்து, கடகபாவி கிராமத்தின் வயலில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.