Thursday, May 9, 2024
Home » மயிலாப்பூரில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் 2வது நாள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்: வழிநெடுகிலும் மலர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு

மயிலாப்பூரில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் 2வது நாள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்: வழிநெடுகிலும் மலர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு

by MuthuKumar

சென்னை: மயிலாப்பூரில் 2வது நாள் தேர்தல் பிரச்சாரத்தை திமுக தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் தொடங்கினார். அவருக்கு மலர் மாலை அணிவித்து வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு. மயிலாப்பூர் பகுதியில் தனது 2வது நாள் தேர்தல் பிரச்சாரத்தை தென்சென்னை திமுக ேவட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் தொடங்கினார்.

இன்று காலை 8 மணி முதல் மயிலாப்பூர் கிழக்கு பகுதியில் தொடங்கி மாதவநகர் ஆர்.கே.நகர், வள்ளீஸ்வரன் தோட்டம், கட்டபொம்மன் தெரு, காமராஜர் சாலை, சீனிவாச அவின்யூ, ராஜா முத்தையாபுரம், குட்டிகிராமணி தெரு, கபாலி வனபோஜன தோட்டம், நாராயணசாமி தோட்டம் இரண்டாவது சாலை, அதனை தொடர்ந்து 171 வட்டத்திலிருந்து எஸ்.கே.பி. புரம், அன்னை தெராசா நகர், அன்னை சத்தியா நகர், கிரீன்வேஸ் ேராடு, ஆர்.கே.மடம் சாலை, ராஜா தெரு, ராஜா கிராமணி தோட்டம், காவலர் குடியிருப்பு, சீனிவாசபுரம், 126வது வட்டத்தில் பவானிகுப்பம் பகுதி, நம்பிக்கை நகர், ராஜீவ்காந்தி நகர், மல்லைமாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வாக்குகளை சேகரித்தார். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்து மலர் தூவியும், ஆங்காங்கே ஆரத்தி ஏற்றினர். திறந்த வாகனத்தில் வாக்கு சேரித்த நிலையில் சில பகுதிகளில் வாகனம் செல்ல முடியாக இடங்களில் இறங்கி சென்று வீடு, வீடாக வாக்கு சேகரித்தார். அந்த பகுதிகளில் வழிநெடுகிலும் மலர் மாலைகளை அணிவித்து வரவேற்று அளித்தனர். இதில் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளும், கட்சியின் உறுப்பினர்களும் வாக்கு சேகரித்தனர்.

பின்னர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியதாவது : வேட்பாளர் பணிமனை கட்டடம் திறக்கும் பொழுது தடுமாறி கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 3 வாரம் ஓய்வெடுக்க சொல்லி இருந்தார்கள். ஆனாலும் தேர்தல் நேரம் என்பதால் ஓய்வு எடுக்காமல் பிரச்சார பணிகளை தொடங்கி இருக்கிறோம். செல்லும் இடங்களில் எல்லாம் குடும்பத் தலைவிகள், பெண்கள் உற்சாகமாக வரவேற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, கூட்டணி கட்சி பிரநிதிகள் மற்றும் திமுக உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

five × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi