Wednesday, May 22, 2024
Home » இஸ்லாமிய மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது ஏற்புடையதல்ல: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

இஸ்லாமிய மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது ஏற்புடையதல்ல: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

by Kalaivani Saravanan

சென்னை: இஸ்லாமிய மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது ஏற்புடையதல்ல என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டின் உயர் பதவியில் உள்ள பிரதமர் சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல. உயர் பதவியில் உள்ளவர்கள் இதுபோன்ற கருத்துகளை தவிர்ப்பது நாட்டின் நலன், மதநல்லிணக்கத்துக்கு நல்லது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பிரதமர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தாலும் அதில் கண்டனம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. மோடி பேச்சை திமுக உள்பட இந்தியா கூட்டணி கட்சியினர் கடுமையாக கண்டித்து வரும் நிலையில் எடப்பாடி ஏற்கத்தக்கதல்ல என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

You may also like

Leave a Comment

twenty + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi