காளான் – 2 கப் (இரு துண்டுகளாக்கப்பட்டது)
குடைமிளகாய் – 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் – 1/2 கப் (நறுக்கியது)
தயிர் – 1/4 கப்
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
கசூரி மெத்தி – சிறிது
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் தயிர், கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சாட் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.பின் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.பின்பு அதில் காளானை சேர்த்து வதக்க வேண்டும். காளானில் இருந்து நீர் வெளியேறி வற்றியதும், அதில் தயிர் கடலை மாவு கலவையை சேர்த்து கிளறி விட வேண்டும்.காளான் நன்கு வெந்து, மசாலாவில் உள்ள பச்சை வாசனை நீங்கி, கிரேவி சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கசூரி மெத்தி மற்றும் எலுமிச்சை சாற்றினைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான காளான் டிக்கா மசாலா தயார்.