மும்பை: இடைநேர வர்த்தகத்தின்போது 263 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ், வர்த்தக நேர இறுதியில் சரிந்து முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 18 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 61,982 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 13 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 34 புள்ளிகள் உயர்ந்து 18,348 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுபெற்றது.