தேனி: முல்லைப்பெரியாறு அணையில் நீர்த்திறப்பு குறைப்பால் லோயர்கேம்ப் நிணமயத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. லோயர் கேம்ப்பிற்கு வினாடிக்கு 250 கனஅடி நீர் தேவைப்படும் நிலையில் 105 கனஅடி மட்டுமே திறக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மின் உற்பத்தி முடங்கியது இதுவே முதல்முறை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.