முல்லைப் பெரியாறு வாகன நிறுத்த மையம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. வாகன நிறுத்த மையம் முல்லைப் பெரியாறு அணை குத்தகை பகுதிக்கு வெளியில் உள்ளது என சர்வே ஆஃப் இந்தியா அறிக்கையில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. தமிழகத்தின் ஆட்சேபனைகளையும், யோசனைகளையும் சர்வே ஆஃப் இந்தியா அதிகாரிகள் ஏற்கவில்லை.