மன்னார்குடி: யானைகளின் பாதங்கள் ஆரோக்கியமாகவும் உடலின் எடையை தாங்கக் கூடிய அளவிற்கு வலுவாக இருப்பதற்கு யானைகளை மண் தரையில் நிற் பதற்கு போதிய இடம் தேர்வு செய்து மண் வசதி செய்து தரப்பட வேண்டும் என மாவட்ட வளர்ப்பு யானைகள் மற்றும் மேலாண்மைக்குழு உறுப்பினர் டாக்டர் சிவகணேசன் வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கோயில் யானைகளை பராமரிப்பு முறை யில் மிக முக்கியமான அம்சம் பாதங்களை சரியான முறையில் பராமரித்தல் ஆகும். சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் கிலோ எடை உள்ள யானையின் உடல் எடையை நான்கு பாதங்களும் தாங்கக்கூடிய வலுவை பெற்றன. காட்டு யானைகள் பல மைல் தூரங்கள் தினந்தோறும் பலதரப்பட்ட தாவர ங்களைக் கொண்ட நிலப்பகுதியை கடந்து செல்கின்றன. இதன் மூலம் அவை களின் பாதங்கள் சீராக ஆரோக்கியமாக இருக்கும்.வளர்ப்பு யானைகள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் பராமரிக்கப்படுகிறது. மேலும் யானைகள் கற்களால் ஆன தரையில் நிற்கும் பொழுது பாதங்களின் நிலைமை வலுவை மற்றும் சிறு சிறு ரேகைகள் பெரிய அளவில் விரிய கூடிய வாய்ப்பு உண்டு. இதன் மூலம் பல மருத்துவ ரீதியான பிரச்சனை கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனால் நோய்க்கிருமிகள் பாதங்களை பாதிக்க வாய்ப்புகள் உண்டு. பாதங்களில் தென்படும் பெரிய அளவிலான ரேகைகள் மூலம் சிறிய அளவி லான கற்கள் மற்றும் மண் போன்ற வை சேர்ந்து பாதங்களை சேதப்படுத்த அதிக வாய்ப்பு உண்டு. மாதம் இருமுறை பாதங்களில் காணப்படும் வெடிப்பு களை பிரத்தேகமான மருத்துவ உபகரணங்களைக் கொண்டு பராமரிக்க வேண்டும்.
இதன் மூலம் சிறிய அளவில் பாதங்களில் உள்ள துவாரங்களை அகற்ற முடியும். யானைகளின் பாதத்தை பாதுகாப்பது என்பது வளர்ப்பு யானைகளின் மேலாண் மைத் திட்டத்தின் முக்கிய அம்சம். ரங்கம், மன்னார்குடி, திருக்கடையூர், உப்பிலியப்பன்,திருவானைக்காவல், மலைக்கோட்டை, பழனி, வில்லிபுத் தூர், சங்கரன்கோயில், ராமேஸ்வரம், திருச்செந்தூர் போன்ற பகுதிகளில் யானைகள் பகல் நேரங்களில் அதிகமாக மண் தரையில் கட்டப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான வளர்ப்பு யானைகளின் அணுகுமுறை ஆகும். சிறப்பு கால்நடை மருத்துவர்களைக் கொண்டு தற்பொழுது பாதங்களுக்கு தேவையான மருந்து கலவைகளை கொண்டு பராமரிக்கப்படுகிறது. சில கோ யில் யானைகளுக்கு பாதங்களின் மேலாண்மை தேவைப்படுகிறது. மாவட்ட அளவிலான வளர்ப்பு யானைகள் குழு இதைக் கருத்தில் கொண்டு நடவடி க்கை எடுத்து வருகின்றனர். மேலும் யானைகளை மணல் பகுதிகளில் பகல் நேரங்களில் பராமரிக்கும் பட்சத்தில் அவைகளின் பாதங்கள் ஆரோக்கியமாகவும் உடலின் எடையை தாங்கக்கூடிய கனரக வாகனத்தில் உள்ள ஷாக் அப்சர்வர் போன்ற திறனை அடையும். தற்போது வளர்ப்பு யானைகள் போதிய நேரம் மண் பகுதியில் பராமரிக்கப் படுகிறது. யானைகளை மண் தரையில் நிற்க போதிய இடம் தேர்வு செய்து மண் வசதி செய்து தரப்பட வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.