Saturday, May 18, 2024
Home » ஓ…ஓ…ஓ… என எல்லை மீறிய ஆபாச பேச்சு தாய்மார்களை இழிவுபடுத்திய ராதாரவி: ‘நாம ஜெயிக்கலாம் மாட்டோம்… ஓட்டுக்கு பணம் கொடுங்க…’ என பாஜவுக்கு அட்வைஸ்

ஓ…ஓ…ஓ… என எல்லை மீறிய ஆபாச பேச்சு தாய்மார்களை இழிவுபடுத்திய ராதாரவி: ‘நாம ஜெயிக்கலாம் மாட்டோம்… ஓட்டுக்கு பணம் கொடுங்க…’ என பாஜவுக்கு அட்வைஸ்

by Karthik Yash

ஒன்றியத்தில் பாஜ அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் பொதுக்கூட்டம் கடந்த 17ம் தேதி மூலக்கடை சந்திப்பில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத் துணைத் தலைவர் நாராயண திருப்பதி மற்றும் பேச்சாளர் நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். நடிகர் ராதாரவி பேசும்போது கீழே இருந்த தொண்டர்கள் கமென்ட் செய்தனர். அதற்கு அவர்களைப் பார்த்து, ‘ஓ…ஓ…’ என்ற கெட்ட வார்த்தையால் வசைபாடி பேசி, ‘போய் உட்காருங்கள்…’ என ராதாரவி தெரிவித்தார். அதற்கு, கீழே இருந்த கட்சிக்காரர், ‘ஒருவர் உங்களது பேச்சை நாங்கள் ரசிக்கிறோம்’ என தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்து ராதாரவி மீண்டும் கெட்ட வார்த்தை பேச தொடங்கினார். அப்போது பாஜ தொண்டர் ஒருவர் கீழே செல்போனில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். தனது பேச்சை நிறுத்திய ராதாரவி, ‘நீ செல்போனில் பேசுவது எனக்கு இங்கு கேட்கிறது, நான் பேசுவதை நீ கேட்கிறாயா அல்லது நீ பேசுவதை நான் கேட்க வேண்டுமா’ என கோபமாக கேட்டார். தொடர்ந்து அவர் பேசும்போது, ‘கிருஷ்ணசாமி, ஜிகே வாசன் போன்றோரின் கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியே சென்றாலும், மற்ற எந்த கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியே சென்றாலும் கூட்டணி இல்லாமல் பாஜ தனித்து நிற்கும். பாஜ கட்சி இன்னும் வளராததற்கு காரணம் சுறுசுறுப்பு குறைவாக உள்ளது. நான் ஒரு டீ கேட்டு 20 நிமிடம் ஆகிறது. இதுவரை வரவில்லை. இப்போதுதான் பால் கறக்கச் சென்றுள்ளார்கள் என்று நினைக்கிறேன்.

பாஜ மீட்டிங்கில் பக்தியுடன் பேசுவார்கள் என்றுதான் அனைவரும் நினைத்து வந்திருப்பீர்கள். ஆனால் அப்படி பேசினால் வேலைக்கு ஆகாது. பேச்சுக்கு பேச்சு இரண்டு ஓ… போட்டாதான் நீங்கள் பேச்சை ரசித்து கேட்பீர்கள். இந்த மக்களை திருத்தவே முடியாது. பணம் வாங்கிக் கொண்டுதான் ஓட்டு போடுவார்கள். இந்த தேர்தலில் பாஜ ஜெயிக்கவில்லை என்றால் நாம் அனைவரும் நாசமாக போய் விடுவோம். கிறிஸ்தவ மக்கள் நமக்கு ஓட்டு போடவில்லை, இஸ்லாமிய மக்கள் நமக்கு ஓட்டு போடவில்லை என நாம் கவலை கொள்ள வேண்டாம். ஆறு அறிவு உள்ள மக்கள் அனைவரும் நமக்குத்தான் ஓட்டு போடுவார்கள்’ என்றார்.

கூட்டத்தில் ராதாரவி பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு தொண்டர் எழுந்து பாரத் மாத்தா கி ஜே என கத்தினார். அப்போது டென்ஷனான ராதாரவி, ‘இவன் எல்லாம் நமக்கு எங்கே ஓட்டு போடப் போகிறான், யோவ் உட்காருயா. இதனால்தான் நான் பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு வருவதில்லை. வருகிறேன் என்று சொல்லி பணம் கேட்டால் போதும், மீட்டிங் இப்போ இல்லை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என பாஜவினர் சொல்லிவிடுவார்கள். நானும் தப்பித்து விடுவேன். பணம் கொடுத்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். எனவே இந்த முறை பணம் கொடுக்கச் சொல்லுங்கள்.

நாம் நினைத்தால் வெற்றி பெறலாம் என்பது முடியாது, மேலே உள்ளவனும் நினைக்க வேண்டும். அதனால் மேலே சொல்லி பணம் வாங்குங்கள்’ என மேடையில் அமர்ந்திருந்த பாஜ துணைத் தலைவர் நாராயண திருப்பதியிடம் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வருகிறது. இதை பார்க்கும் நெட்டிசன்கள், ‘இதுதான் பாஜவின் தூய்மையான அரசியலா? வரும் தேர்தலில் பாஜ பணம் கொடுத்துதான் ஜெயிக்கப் போகிறதா?’ என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும், பெண்களை தொடர்ந்து இழிவாக பேசி வரும் ராதாரவியை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பெண்கள் வலியுறுத்தி உள்ளனர்.

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi